ஷிர்டி – மன்மாத் சாலையில் மிக அழகாக காணப்படும் ஒரு பூங்கா இந்த லெண்டி பாக் ஆகும். இந்த பூங்காவில் சாயி பாபா பெரும்பாலான நேரத்தை கழித்ததாக கூறப்படுகிறது.
இந்த பூங்காவில் ஒரு கல் இருந்ததாகவும் அது இங்கிருந்த கிராமவாசிகளால் துணி துவைப்பதற்கு பயன்படுத்த பட்ட தாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு நாள் அந்த கல்லின் மீது பாபா அமர்ந்திருந்ததை கண்ட மக்கள் அதன் பின்னர் அந்த கல்லை துவார்காமாய் மசூதிக்கு கொண்டு வந்து புனிதப்பொருளாக வைத்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.
லெண்டி பாக்கில் அகண்ட தீபம் எனப்படும் எப்போதும் எரிந்து கொன்டிருக்கும் ஒரு விளக்கு அவசியம் பார்க்க வேண்டிய அற்புதம் ஆகும். இந்த விளக்கு பாபாவால் வைக்கப்பட்ட அரச மரத்தின் கீழ் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லெண்டிபாக் பூங்கா இருபத்து நான்கு மணி நேரமும் பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.