ஷிர்டியில் உள்ள மற்றொரு ஐதீக ஸ்தலம் இந்த சமாதி மந்திர் ஆகும். இதன் பின்னணியில் ஒரு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது முற்காலத்தில் இந்த சமாதி மந்திர் ஒரு கோடிஸ்வரருக்கு சொந்தமான கோயிலாக இருந்ததாகவும், சாய் பாபாவின் தீவிர பக்தராக இருந்த அந்த கோடீஸ்வரர் இந்த கோயிலில் ஒரு முரளிதர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பியபோது சாய் பாபாவே முரளிதராக மாறி இந்த கோயிலில் குடி கொண்டதாகவும் அதன் பின்னரே அது இன்றைய சமாதி மந்திர் எனும் கோயிலாக மாறியதாகவும் அந்த கதை சொல்கிறது.
மறைந்த பாலாஜி வசந்த் 1954ம் ஆண்டு இந்த கோயிலில் சாய் பாபாவின் சிலையை இத்தாலியன் பளிங்கு கல்லில் வடித்து கொடுத்துள்ளார். சமாதி மந்திர் கோயில் காலை 5 மணியிலிருந்து பூஜையுடன் திறக்கப்பட்டு இரவில் 10 மணிக்கு பூஜையுடன் மூடப்படுகிறது.