சிவகங்கேயில் அமைந்துள்ள ஹொன்னாதேவி கோயில் ஸ்வர்னாம்பாள் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் துணைவியான ஹொன்னாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோயில் முன்னூறு ஆண்டு பழமையானது.ஹொய்சால பேரரசின் அரசி ஷந்தாலா, ஹொன்னாதேவி அம்மனின் தீவிர பக்தை ஆவார்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்களுக்கும் மேலாக ஹொன்னாதேவி அம்மனுக்கு விமரிசையான திருவிழா நடைபெறும். சிவகங்கேயை சுற்றி உள்ள ஏழு கிராமங்களிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து இந்த திருவிழாவில் கலந்துகொள்வர்.