ஓலகலா தீர்த்தம் என்பது சிவகங்கே கோயிலுக்கு பின்னால் இயற்கையாக பொங்கிப் பெருகும் ஊற்று நீராகும். இந்த நீரானது பாறைகளிலிருந்து தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருக்கும். இதை ஒரு சிறிய துளை மூலமாக காணலாம். அந்த துளையினுள் கையை விட்டு எவரொருவர் ஊற்று நீரை தொடுகிறாரோ அவருடைய வேண்டுதல் கண்டிப்பாக நிறைவரும் என்பது ஐதீகம்.