சிவகிரியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தொடி வனவிலங்கு சரணாலயத்துக்கு பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டும். இது 1998-ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இங்கு புலிகளை தவிர பல்வேறு மிருங்களும், பறவை இனங்களும் இருக்கின்றன. அவற்றில் இராஜாளி கழுகும், குள்ள நரியும், காட்டெருமையும் இங்கு பிரபலம். அதோடு காட்டு நாய், யானை, கருஞ்சிறுத்தை, பெரிய கொம்புடைய ஆந்தை, குரைக்கும் மான், பறக்கும் நரி, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளையும் இங்கே காணலாம்.
அதுமட்டுமல்லமால் கூக்குருவான், கருஞ்சிட்டு, தூக்கணங்குருவி, ரெட்டைவால் குருவி உள்ளிட்ட பறவை இனங்களையும், 120-க்கும் மேற்பட்ட மரவகைகளையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.