இயற்கையை அதன் தூய்மையான சூழலில் பார்த்து ரசிப்பதற்கு இந்த ஜங்கிள் சஃபாரி எனும் காட்டு சுற்றுலா வகை செய்கிறது. ஷிவ்புரி பகுதியில் தூய்மை கெடாத வனப்பகுதிகள் ஏராளம் உள்ளன.
அடர்த்தியான தாவரச்செழுமை நிரம்பியுள்ளதால் மனித ஊடுறுவல்கள் தடுக்கப்பட்டு இயற்கை அம்சங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நகரச்சந்தடியையும் வறண்ட பூமியையுமே பார்த்து அலுத்துப்போன பயணிகளுக்கு இந்த வனப்பகுதிகள் பாலைவனச்சோலை போன்று காட்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜங்கிள் சஃபாரி எனப்படும் காட்டுச்சுற்றுலாவின்போது வாகனங்களின் பாதுகாப்பாக அமர்ந்தபடி பயணிகள் காட்டுயிர்களை அவற்றின் இயல்பான சூழலில் பார்த்து ரசிக்கலாம்.
விலங்குகள் மற்றும் பறவைகளை அவற்றின் இயற்கையான உறைவிடங்களில் தரிசிப்பதற்கு இந்த காட்டுச்சுற்றுலா வகை செய்கிறது. மான்கள் கூட்டம், நில்கை மான், புள்ளி மான் மற்றும் கரடி போன்ற விலங்குகளை காட்டுச்சுற்றுலாவின்போது பார்த்து ரசிக்கலாம்.