ஷிவ்புரி நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலம் இந்த ரண்ணோத் கோக்காய் மத் எனப்படும் கோயிலாகும். ஹிந்துக்களின் ஆழமான மத நம்பிக்கைகள் காரணமாக புராதன காலத்தைச்சேர்ந்த வழிபாட்டுதலங்கள் இன்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக யாத்ரீகத்தலங்களாக மாறியுள்ளன.
6 மற்றும் 7 ம் நூற்றாண்டைச்சேர்ந்த கோயில்களில் 21ம் நூற்றாண்டைச்சேர்ந்த பக்தர்கள் வழிபாட்டுக்காக விஜயம் செய்வது ஒரு பெரிய வரலாற்று பாரம்பரிய அம்சம் என்றுதான் சொல்லவேண்டும்.
மஹூவா சிவன் கோயில், தேராஹி கோயில் மற்றும் சித்தேஸ்வரா கோயில் போன்றவை ஷிவ்புரி நகரத்தில் மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதே காலத்தில்தான் இந்த ரண்ணோத் கோக்காய் மத் எனும் கோயிலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இது ஷிவ்புரி நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் உள்ளது.
சிவபெருமானுக்கான இந்த கோயில் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியின் மையத்தில் அமைந்திருப்பது ஒரு தனித்தன்மையான அம்சமாகும். புராதன காலத்தின் சான்றாக வீற்றிருக்கும் இந்த கோயிலை தரிசிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.