அக்காலத்தைய முகலாய மன்னர்கள் முதல் பிற்காலத்தைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வரை வேட்டையில் ஈடுபட்ட வனப்பகுதியாக மாதவ் தேசிய பூங்கா வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
தனது படைக்கு தேவையான யானைகளை அக்பர் இந்த காட்டுப்பகுதியில் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதவ் தேசிய பூங்காவில் 354 ச.கி.மீ பரப்பளவில் மடிப்புகளோடு நீண்டு கிடக்கும் மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான புல்வெளிப்பிரதேசம் போன்றவை ஒரு ஏரியைச்சுற்றி சூழ்ந்து காட்சியளிக்கின்றன.
இயற்கை ரசிகர்களுக்கு இந்த வனப்பகுதி மிகவும் பிடித்தமான ஸ்தலமாக உள்ளது. தாவரச்செழுமை மற்றும் காட்டுயிர் அம்சங்கள் ஆகியவை இந்த பூங்காவில் மனித இடையூறுகள் ஏதுமின்றி நிரம்பியுள்ளன.
சிந்தியா ராஜ வம்சத்து மன்னரான சிவாஜி ராவ் சிந்தியா என்பவரால் கட்டப்பட்ட ஜார்ஜ் கேசில் எனும் கோட்டை ஒன்றும் இந்த பூங்கா வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. சுதந்திர காலத்திற்கு முந்தைய காலனிய கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது.
இதன் மேற்பகுதியிலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது ஒரு அற்புதமான அனுபவமாக சொல்லப்படுகிறது. சாகச பொழுதுபோக்கில் ஈடுபட விரும்பவர்கள் இங்குள்ள சாக்யா சாஹர் படகுத்துறை மூலமாக படகுச்சவாரி செய்து ஏரியில் வசிக்கும் முதலைகளை மிக அருகில் பார்த்து ரசிக்கலாம்.