வரலாற்றின் பக்கங்களில் பொதிந்துள்ள மற்றும் ஒரு வைரக்கல் இந்த மஹுவா சிவன் கோயில் ஆகும். ஷிவ்புரி பகுதியில் மஹுவா எனும் சாதாரண கிராமத்தில் உள்ள இந்த கோயிலில் 6 மற்றும் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்கள் காணக்கிடைக்கின்றன.
ரானோத் கல்வெட்டுக்குறிப்புகளில் இந்த மஹுவா கிராமம் மதுமதி என்ற பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் சைவ மார்க்கம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் அந்த கல்வெட்டுக்குறிப்பில் காணப்படுகின்றன.
இந்த கோயில் ஸ்தலத்தில் உள்ள சைவ மண்டபம் 7ம் நூற்றாண்டில் பாதியில் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு நிறைவடையாத கட்டுமானம் அல்லது புதுப்பிப்பு பணியை குறிப்பிடும் வகையில் இக்கோயில் காட்சியளிக்கிறது.
இந்த மஹுவா சிவன் கோயிலானது நகர பாணி கோயிற்கலை வடிவமைப்புடன் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் கருவறை வாசற்பகுதியின் இருபுறமும் கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிக்கடவுள்களை குறிக்கும் சுவர்ச்சிற்ப வடிப்புகளை காணலாம்.