ஷிவ்புரி நகரத்தை சுற்றி அமைந்திருக்கும் முக்கியமான நீர்வீழ்ச்சிகளில் இந்த பவா நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். சுல்தான் கர் நீர்வீழ்ச்சி மற்ற்ம் பூரா கோன் நீர்வீழ்ச்சி போன்றவை யாவும் தனித்தன்மையான தோற்றத்துடன் காணப்பட்டாலும், இந்த பவா நீர்வீழ்ச்சி தனக்கேயுரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.
ஷிவ்புரி நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் போஹ்ரி எனும் நகர்ப்பகுதியில் இந்த பவா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 500 அடி ஆழமுள்ள பவா குண்ட் எனும் தீர்த்த குளத்தில் இந்த பவா நீர்வீழ்ச்சி வீழ்கிறது.
இந்த குளத்தில் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நார்கெலிங் போன்ற நீர் மூழ்கு நீச்சல்களில் சாகச விரும்பிகள் ஈடுபடலாம். இருப்பினும் இதற்கான உபகரணங்கள் எதுவும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்தில் கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்தில் ஒரு பிரம்மாண்ட சிவன் சிலையையும் பயணிகள் தரிசிக்கலாம். பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் இந்த சிவன் நிறைவேற்றி வைப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
சுற்றிலும் வீற்றிருக்கும் பசுமையான மலைப்பகுதிகளுடன், இயற்கை அழகு மற்றும் ஆன்மிக பின்னணி கொண்ட சுற்றுலாத்தலமாக இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி பயணிகளுக்காக காத்திருக்கிறது.