சோன் சிரையா பறவைகள் சரணாலயம் ஷிவ்புரி நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. மறைந்து கொண்டிருக்கும் சில அரிய பறவை இனங்கள் இந்த பறவைகள் சரணாலயத்தில் வசிக்கின்றன.
பொதுவாக பறவைகள் அதிகம் வசிக்கும் பிரதேசத்துக்கு சுற்றுலாப்பயணிகளின் மனதை உற்சாகப்படுத்தி புத்துணர்வூட்டும் சக்தி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரணாலயத்தில் சோன் சிரையா எனப்படும் காட்டு மயில் இனம் வசிக்கிறது.
தற்போது எண்ணிக்கையில் குறைந்த வரும் இந்த பறவை இனத்தை வெகுசில சரணாலயங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இனத்தை பாதுகாக்கும் முயற்சியாக அரசாங்கம் இந்த சரணாலயப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
ஷிவ்புரி நகரத்திற்கு அருகேயே அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயத்திற்கு அதிக எண்ணிக்கையில் இயற்கை ரசிகர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் வருகை தருகின்றனர்.