ஸ்ரீ பச்ரை தீர்த் எனும் இந்த வழிபாட்டுத்தலம் ஒரு ஜைன கோயிலாகும். இன்னும் பல கோயில்களை உள்ளடக்கிய பச்ரை எனும் அழகிய கிராமத்தில் இந்த ஜைனக்கோயில் உள்ளது.
இந்த கிராமத்திலுள்ள கோயில்களில் ஸ்ரீ பச்ரை தீர்த் மற்றும் ஸ்ரீ பனிஹர் பராய் கனியாகன் தீர்த் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவையாகும். பனிஹர் நீராடு துறையில் குளித்தால் பாவங்கள் கழுவப்படும் என்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்பவர்கள் யாவரும் இந்த நீராடு துறையில் நீராடிய பிறகே மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு விஜயம் செய்கின்றனர்.
ஸ்ரீ பச்ரை தீர்த் கோயில் ஷீதல்நாத் பஹவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் கருவறையில் ஷீதல்நாதரின் சிலை பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
375 செ.மீ உயரத்தில் கலையம்சத்தோடு இந்த சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. தெய்வீகச்சக்தி நிரம்பியதாக இந்த சிலை பக்தர்களால் வணங்கப்படுகிறது.