தாத்யா தோப்பே மெமோரியல் எனப்படும் இந்த நினைவுச்சின்னம் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றை கௌரவிக்கும் நோக்கத்துடன் எழுப்பப்பட்டுள்ளது.
1857ம் ஆண்டு வெடித்த முதல் இந்திய சுதந்திரப்புரட்சியின்போது உயிர்த்தியாகம் செய்த ராமச்சந்திர பாண்டுரங்க தாத்யா தோப்பே எனும் தலைவரின் பெயரில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஜான்சி ராணி லட்சுமிபாய் எனும் ராணி ஆங்கிலேயர்களிடமிருந்து குவாலியர் நகரத்தை கைப்பற்றியதில் இவரது பங்கு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இறுதியில் நர்வார் ராஜாவான மான்சிங் என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் பிடிபட்ட இவர் 1859ம் ஆண்டு 18ம் நாள் ஷிவ்புரி நகரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
ஆங்கிலேய ஊழியராக இருந்த தனது தந்தைக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டதை அடுத்து தாத்யா தோப்பே ஆங்கிலேய அரசை வெகு தீவிரமாக எதிர்க்க தொடங்கினார். பின்னாளில் குவாலியரை கைப்பற்றிய போரில் மட்டுமல்லாமல் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்துவதிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
நாட்டுப்பற்றும் வீரமும் நிரம்பிய இந்த போர் வீரரை போற்றும் வகையில் இயோலா மற்றும் அவர் கொல்லப்பட்ட ஷிவ்புரி ஆகிய நகரங்களில் நினைவுச்சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.