இந்தியாவிலேயே செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்தேக்கங்களில் மிகவும் பெரியது ஜாய்சாகர் நீர்தேக்கமாகும். 1967-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் ரங்க்பூர் நகரில் உள்ளது.
அரசர், தன் தாய் ஜாய்மதியின் நினைவாக 45 நாட்களில் இந்த நீர்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது. 318 ஏக்கர் பரப்பளவில் மனிதனால் கட்டப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கத் தொட்டியாக இது திகழ்கிறது.
நீர்தேக்கத் தொட்டியைச் சுற்றி பல்வேறு கோவில்கள் உள்ளன. கேசவரை விஷ்ணு டால் அல்லது ஜாய் டால், தேவி கர், பைத்யநாதர் சிவ டால், ஸ்ரீ சூர்ய மந்திர், கனாஷ்யம் டால் அல்லது நாடி-கோசை டால் மற்றும் கணேஷ் மந்திர் போன்ற பல கோவில்கல் இங்கு உள்ளன. நீர்தேக்கத்தின் வடக்குப் பகுதியில் இந்தக் கோவில்கள் அமைந்துள்ளன.
விஷ்ணு கோவில், தேவி கர், சிவன் கோவில் மற்றும் கானாஷ்யம் கோவில் என இந்த நான்கு கோவில்களும் அசாமின் மிகமுக்கியமான கோவில்களாகும். விஷ்ணு டால் நுணுக்கமான கட்டிட்டக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. வருடந்தோறும், பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.