சிப்சாகர் ஏரிக்கு அருகே அமைந்திருக்கும் மிக உயரமான கோவில் சிவா டால். இந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்களிலேயே மிகவும் உயரமான கோவில் சிவா டால் ஆகும்.
1734-ஆம் ஆண்டு, அஹோம் அரசர் சுவர்கதியோ சிப சிங்கரின் மனைவி ராணி ராஜா அம்பிகா, இந்தக் கோவிலைக் கட்டினார். இந்தக் கோவிலின் மேற்கூரை, 8 அடி உயரம் கொண்ட தங்கத்தால் ஆன மண்டபத்தைக் கொண்டிருக்கிறது.
அஹோம் அரசர்களின் கட்டிடக் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது சிவா டால் திருக்கோவில்.
பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் சிவா டால் கோவிலுக்கு வருகின்றனர். சிவராத்திரி நாட்களில், கோவில் மைதானத்தில், பெரிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. சிவா டால் கோவிலுக்கு அருகில், தேவி டால் மற்றும் விஷ்ணு டால் ஆகிய இரு கோவில்கள் உள்ளன.
இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை பெரிது கவரும் வகையில் அமைந்திருக்கிறது. கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும், இரும்பால் ஆன பொருட்கள், அஹோம் சாம்ராஜ்யத்தின் நினைவுகளாக விளங்குகின்றன.