சிகார் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் ஹரஸ்நாத் கிராமம் ஹர்ஷ் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கிராமம் பல்வேறு தொன்மை வாய்ந்த ஆலயங்களுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
அதிலும் குறிப்பாக 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹரஸ்நாத் கோயிலுக்கு நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இதுதவிர இந்த கிராமத்துக்கு வரும் பயணிகள் சிவா சிங் மகாராஜாவால் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலுக்கும், அருகாமையில் உள்ள மற்றொரு சிவாலயத்துக்கும் செல்லலாம்.
ஹரஸ்நாத் கிராமத்தில் கி.பி 961-ஆம் ஆண்டை சேர்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ஒன்றையும் நீங்கள் பார்க்கலாம். இந்த கல்வெட்டு புகழ்பெற்ற சௌஹான் சாம்ராஜ்யத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் நம்பத்தகுந்த சாட்சியாக வரலாற்றியலாலர்களால் கருதப்படுகிறது.