சிகார் நகரிலிருந்து 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதுஷ்யாம்ஜி கிராமத்தில் கதுஷ்யாம்ஜி கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் பழமையான வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
அதோடு கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை பற்றி மகாபாரத இதிகாசத்தில் குறிப்புகள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தில் நீராடுவதை மிகவும் புனிதமான காரியமாக கருதுகின்றனர்.
மேலும் கோயிலில் உள்ள ஷியாம் தோட்டத்தின் வசீகரிக்கும் இயற்கை தோற்றத்தின் காரணமாக இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
கதுஷ்யாம்ஜி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கதுஷ்யாம்ஜி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது இந்தப் பகுதிகளின் கலாச்சாரம் சார்ந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல் இங்கு பால்குன் சுத்த தசமி மற்றும் துவாதாசிக்கு இடையில் நடத்தப்படும் மூன்று நாள் ஆண்டுத் திருவிழாவும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.