யாத்ரிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆன்மிக ஸ்தலம் இந்த அறவளி ஆகும். விதோபா ஆலயம் மற்றும் சதேரி தேவி ஆலயம் இவ்விரண்டும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஆலயங்களாக பிரசித்தி பெற்றவை ஆகும்.
வாழைத்தோப்புகள் நிறைந்த குறுகிய நீண்ட பாதை வழியே யாத்ரீகர்கள் நடந்து சென்று விதோபா கடவுளை தரிசிக்கின்றனர். இது சிந்துதுர்க் பகுதியில் அமைந்துள்ளது. கோலாபுரி செருப்புகளை இங்குள்ள கடவுளுக்கு வழங்குவது சடங்காக கருதப்படுகிறது.