சிந்துதுர்க் என்றால் மராத்தி மொழியில் கடலில் கட்டப்பட்ட கோட்டை என்பது பொருள். இப்பகுதியின் அடையாளமாக இந்த கோட்டை விளங்குகிறது. 1664 லிருந்து 1667க்குள் மூன்றே ஆண்டுகளில் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் இந்த கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. குர்தே எனும் சிறு பாறைத்தீவின் மீது 100 போர்த்துகீசிய கட்டிடக்கலை வல்லுனர்களையும் 3000 தொழிலாளர்களையும் கொண்டு இது கட்டப்பட்டுள்ளது.
ஹிரோஜி இந்துல்கர் என்ற அக்காலத்திய கட்டிடக்கலை சிற்பி இந்த கோட்டையின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட்தாகவும் 4000 கிலோ இரும்பு உருக்கப்பட்டு அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டையை சுற்றிலும் 9.2 மீட்டர் உயரம் கொண்ட சுற்றுச்சுவர் சுமார் 4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டைக்குள் ஹனுமான், ஜரிமரி, பவானி போன்ற கடவுள்களுக்கு கோயில்கள் உள்ளன.