சிந்துதுர்க் பகுதியில் தார்கர்லி கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்றது. தார்கர்லி என்பது இந்த கடற்கரை அமைந்துள்ள கிராமத்தின் பெயராகும். நீண்டு காணப்படும் இந்த தூய்மையான கடற்கரை நீண்ட தூரம் தனிமையாக ரசனையுடன் நடப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
பாதங்களை ஸ்பரிசிக்கும் மென்மையான மணலும், தொடுவானம் வரை விரிந்து கிடக்கும் கண்ணாடி போன்ற கடல் நீரும் தரும் ஆனந்தத்தை வார்த்தைகளால் நிச்சயம் விவரிக்க முடியாது. கடலின் தரை தெரியும் அளவுக்கு நீர் கண்ணாடி போன்று காணப்படும் காட்சி இங்கு வந்து அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரியும்.
இந்த கடற்கரை பெண் கடல் ஆமைகளுக்கு முட்டையிட்டு குஞ்சு பொரிக்க சிறந்த இடமாக திகழ்கிறது. ஆகவே கடற்கரையில் நடக்கும்போதே ஆங்காங்கே ஆமைகள் படுத்திருப்பதையோ முட்டைகளை அடை காப்பதையோ பார்க்க முடியும்.