வேறெங்குமே காண முடியாத ஸ்படிக துல்லியத்துடன் இங்கு கடற்கரையை காணலாம். இது தவிர்த்து ஏராளமான அம்சங்கள் இந்த கடற்கரையில் நிறைந்துள்ளன. சிந்துதுர்க்கில் அமைந்துள்ள இந்த கடற்கரை அதன் இயற்கை எழிலுக்காகவும், சூழலுக்காகவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வசிகரீத்து இழுக்கிறது.
இந்த கடற்கரையின் ஓரம் முழுக்கவும் பசுமையான மா மரங்கள் மற்றும் முந்திரி பலா மரங்களால் நிரம்பியுள்ளது. இளநீரை உறிஞ்சியபடியே சூரியன் அஸ்தமனமாவதை ரசிக்கும் அனுபவத்தை ஒரு முறையாவது இந்த கடற்கரையில் அனுபவிப்பது அவசியம்.