மஹாநதியின் கரையில் வீற்றிருக்கும் மற்றொரு முக்கியமான வழிபாட்டுத்தலமே இந்த கந்தேஷ்வர் கோயில். இப்பகுதியில் திரட்டப்பட்ட கோயில்கள் மற்றும் விஹாரங்களின் இடிபாடுகளிலிருந்து இந்த கந்தேஷ்வர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
இதன் பெயரிலேயே இந்த தகவல் அடங்கியுள்ளது. கோயிலின் உள்ளே கலவையாக காணப்படும் சிற்பங்கள் மற்றும் பல்வேறு பாணிகளுக்குரிய கட்டுமானங்கள் போன்றவை இதற்கான ஆதாரமாக அமைந்திருப்பதோடு வியக்கவும் வைக்கின்றன. அதாவது இடிபாடுகளிலிருந்து திரட்டி இப்படியும் உருவாக்க முடியுமா எனும் வியப்பு.
வேறுபட்ட மதப்பிரிவுகளை சேர்ந்த பல்வேறு கோயில்களின் இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு மறுபிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிலைகளை இந்தக்கோயிலில் பார்த்து ரசிக்கலாம்.
மண்ணைத்தொடும் புத்தர் சிலை, நடராஜர் சிலை, கருட நாராயண், ஷிவ்-லீலா சித்தரிப்புகள், வேறங்குமே பார்க்க முடியாத ராவணனின் முக அமைப்பு, மஹிஷாசுரமர்த்தினி போன்ற அம்சங்கள் இந்த கோயிலின் உள்ளே காணப்படுகின்றன.