ராமபிரானின் தம்பி லட்சுமணனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த லக்ஷ்மணா கோயில் இந்தியாவில் முதல் முதலாக செங்கற்களால் எழுப்பப்பட்ட கோயிலாக பிரசித்தி பெற்றுள்ளது.
சத்திஸ்ஹர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. நுணுக்கமான சிற்ப வடிப்புகள் மற்றும் கலையம்சங்களை இந்த கோயிலில் காணலாம்.
ஒரு பிரம்மாண்டமான பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த செங்கற்கோயில் மூன்று முக்கியமான அங்கங்களை கொண்டிருக்கிறது. கருவறை, அந்த்ராலா எனப்படும் நடைவெளி மற்றும் மண்டபம் என்பவையே அவை.
இந்த கோயிலில் உள்ள தூண்களில் வாதயன், சித்யா காவாக்ஷா, பர்வஹாக்னா, அஜா, கீர்த்திமுக் மற்ரும் காமா அமாலக் போன்ற உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.