கக்கார் பள்ளத்தாக்கில் உள்ள வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் மிக்க இடங்களின் சொர்க்கமாக சிர்ஸாவும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் உள்ளன. 1967 மற்றும் 1968-ம் ஆண்டுகளில் கக்கார் நதிக்கு அருகில் 54 இடங்களில் இந்திய தொல்லியல் நிறுவனம் அகழ்வாய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.
இந்த அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் ராங் மஹால் கலாச்சாரத்தைச் சேர்ந்த பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களாலான பல்வேறு பெயிண்டிங் பானைகளும், பாத்திரங்களும் உள்ளன.
சிர்ஸாவில் இந்திய தொல்பொருள் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட மூன்று முக்கியமான தொல்பொருள் தலங்களாக கீழ்கண்ட இடங்கள் உள்ளன.
அர்னியன் வாலி : சிர்ஸாவிற்கு தெற்கில் 8 கிமீ தொலைவில் சிர்ஸா பத்ரா சாலையில் உள்ள 4 ஏக்கர் மற்றும் 10 அடி உயர மேட்டுப் பகுதியில், ஆதி மற்றும் மத்திய காலத்தைச் சேர்ந்த உடைந்த மட்பாண்ட பகுதிகள் கிடைத்துள்ளன.
சிக்கந்தர் பூர் : சிர்ஸாவிற்கு கிழக்கில் 12 கிமீ தொலைவில் இரண்டு மேட்டுப்பகுதிகள் உள்ளன. இங்கே கற் பலகைகள், இந்திரனின் சிலை, 'ஏகமுக லிங்கம்', மத்திய கால கோவில்களின் மாதிரிகள் மற்றும் ராங் மஹால் காலத்தைச் சேர்ந்த பானைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுசான் : சிர்ஸாவிற்கு 16 கிமீ தொலைவில், உள்ள மேட்டுப் பகுதியில் ராங் மஹால் காலத்தைச் சேர்ந்த மத்திய கால மட்பாண்ட பொருடக்ளின் சிதறல்கள் கிடைத்துள்ளன.