சிர்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நேரம் இருந்தால் மாரிகம்பா கோயிலுக்கு அருகே அமைந்திருக்கும் மகா கணபதி கோயிலுக்கும் செல்லலாம். இந்த கோயிலில் உள்ள அர்ச்சகர்கள், சடங்குகள் செய்து ஜாதகமே இல்லாமல் பக்தர்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து குறி சொல்வார்கள். அப்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ற தீர்வுகளாக, கணபதி பெருமானின் வாக்காக அர்ச்சகர்கள் பதில் கூறுவார்கள்.