சிர்சிக்கு வரும் பயணிகள் நேரம் கிடைத்தால் சஹஸ்ரலிங்கதுக்கு செல்லலாம். இந்த புனித ஸ்தலம் சிர்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், ஷால்மலா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இங்கு மகா சிவராத்திரியை தவிர மற்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படும்.
சஹஸ்ரலிங்கத்தில் உள்ள அடர்ந்தகாடுகளில் இருக்கும் நதிகளில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் நீரில் அமிழ்ந்து காட்சியளிக்கின்றன. இங்கு வரும் சிவபக்தர்களுக்கும், பயணிகளுக்கும் கடவுளின் அருள் கிடைப்பதோடு, இந்த சிவலிங்கங்களின் மாட்சிமை தாங்கிய பேரழகும் காணக்கிடைக்காத காட்சியாக அமையும்.