கோலாப்புரை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களின் இது பிரதானமான ஒன்றாகும். வரலாற்றுக்காலத்தில் 14ம் நூற்றாண்டில் இது பாமனி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.
ஔரங்கசீப் இந்த கோட்டையில் நெடுங்காலம் கழித்ததாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. பேஷ்வாக்களின் உரிமைக்கு வந்தபிறகு இதில் இரண்டாம் பாஜிராவ் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.
இந்தக்கோட்டையின் உள்ளே அமைந்துள்ள வனவிலங்கு காட்சியகம் ஒன்று பிரசித்தமாக அறியப்படுகிறது. இதில் வாத்து, மயில், முயல் குரங்கு போன்ற விலங்குகள் உள்ளன. இதுதவிர இன்ன பிற பொழுது போக்கு அம்சங்களும் இங்கு சுற்றுலா வரும் குழந்தைகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.
இந்த கோட்டை வளாகம் குடும்பத்துடன் அமைதியாக உட்கார்ந்து கோட்டையின் அழகை பார்த்து ரசிக்கவோ அல்லது விலங்குகளை ரசிக்கவோ சிறந்த இடமாகும். கோட்டையின் அருகிலேயே அதனை ஒத்த பழமையை உடைய கிணறு ஒன்றும் எண்கோண வடிவில் கலையம்சத்துடன் அமைந்துள்ளது.