ஹிப்பர்கா ஏரியும் அதை ஓட்டியுள்ள ஏக்ரூக் குளமும் சேர்ந்து உருவானது தான் இந்த ‘ஏக்ரூக் ஹிப்பர்கா ஏரி’ ஆகும். இந்தக் குளம் சோலாப்பூர் பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டுள்ளது.
அப்போதைய ஆங்கிலேய தளபதி அதிகாரி ஒருவரால் இது திட்டமிடப்பட்டுள்ளது.வருடம் முழுதும் நீர் நிரம்பி காணப்படும் இந்த ஏரி சோலாப்பூர் மாவட்டம் முழுமைக்குமான நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது. ஏக்ரூக் நீர்த்திட்டம் தக்காண பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நீர்த்திட்டமாக கருதப்படுகிறது.