சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாத்ரீக ஸ்தலம் இந்த கூடல் சங்கமாகும். ஸீனா மற்றும் பீம் ஆறுகளின் கரையில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் சோலாப்பூர் மாவட்ட த்திலேயே மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்தின் வரலாறு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.
இந்த கூடல் சங்கம் ஸ்தலத்தில் ஹேமந்த்பந்தி முறைப்படி கட்டப்பட்ட மிகப்பழமையான ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் காணப்படும் லிங்கம் வேறெங்குமே பார்க்க முடியாத அளவுக்கு புதுமையாக காணப்படுகிறது.
இதை ஒரு சிறப்பான யாத்ரீக ஸ்தலமாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் ‘கூடல் சங்கம் டெவலெப்மெண்ட் போர்டு’ என்று ஒரு பிரத்யேக துறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே நால்துர்க் கோட்டை மற்றும் நார், மடி என்ற இரட்டை நீர்வீழ்ச்சிகள் போன்றவை அமைந்துள்ளன.புகழ்பெற்ற ஆறுகளான கிருஷ்ணாவும் காட்பிரபாவும் இந்த இடத்தில் இணைந்து மற்றொரு வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்தலமான ஷீசைலத்தினை நோக்கி ஓடுகின்றன.
கூடல் சங்கம் புகழ்பெற்ற ஹேமந்த்பந்தி பாணியில் கட்டப்பட்ட கோயிலைக் கொண்டுள்ளது. இங்குள்ள லிங்கம் போன்று வேறு எங்கும் இல்லை. இங்கு பஸ்வேஸ்வரா வாழ்ந்துள்ளார்.