மோதி பாக் ஏரி அல்லது கம்பர் தாலவ் (ஏரி) என்று அழைக்கபடும் இந்த ஏரி சோலாப்பூர் மாவட்ட த்தில் பிரசித்தி பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. புலம் பெயர் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வந்து தற்காலிகமாக தங்கும் சரணாலயமாக இந்த் ஏரிப்பகுதி விளங்குவதால் இது பறவை ஆர்வலர்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கும் மிக பிடித்த இடமாக உள்ளது.
முன்னர் இந்த மோதி பாக் ஏரி அங்கு மிதக்கும் ரோஜாநிற மற்றும் வெள்ளை நிற தாமரை மலர்களால் நிரம்பியிருந்தது. ஆனால் SMC யின் பராமரிப்பில் இந்த குளம் வந்த பிறகு தற்சமயம் தாமரை மலர்களை பார்க்க முடிவதில்லை என்பது ஒரு சோகம். எனினும் ஒரு சில தாமரை மலர்கள் மிச்சமிருந்து இந்த இயற்கை எழில் சின்னத்திற்கு மெருகூட்டுகின்றன.