ரேவணசித்தேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த பழமையும் தொன்மையும் உடைய ஆலயம் சோலாப்பூர் மாவட்டத்தில் முக்கியமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகும்.
நன்னஜ் காட்டு மயில் சரணாலயத்துக்கும் மோத்தி பாக் ஏரிக்கும் அருகில் இது அமைந்துள்ளது. மூன்று முக்கியமான சுற்றுலா அம்சங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் இப்பகுதி ஒரு பெரிய சுற்றுலா கேந்திரமாக (அதாவது ஒரு பெரிய சர்வதேச பறவைகள் சரணாலயமாக) மாற்றப்படுவதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளது.
பிரசித்தி பெற்ற யோகி ரேவணசித்தேஸ்வரருக்காக இந்த ரேவணசித்தேஸ்வரர் கோயில் உருவாக்கபட்டுள்ளது. கோயிலின் கர்ப்பகிருகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இந்த யோகியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலின் உள்ளே கல்லால் ஆன பல அறைகள் காணப்படுகின்றன.
இந்துக்களின் திருவிழாவான மகர சங்கராந்தி இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த சுப நாளில் ஒரு பெரிய கால்நடை சந்தை ஒன்றும் இங்கு நடத்தப்படுகிறது.