ஸ்ரீ சந்த் தமாஜி யோகிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் சோலாப்பூர் மாவட்ட த்தில் மங்கள்வேதா நகரத்தில் அமைந்துள்ளது. சோலாப்பூரிலிருந்து 55 கி.மீ தூரத்திலும் பந்தர்பூரிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் இந்த நகரம் உள்ளது.
மங்கள்வேதா நகரம் யோகிகளின் நகரம் என்றே அறியப்படுகிறது. 14 நூற்றான்டு காலத்தின் போது சந்த் கங்கோபாத்ரா, சந்த் தமாஜி, சந்த் கோபபாய் மற்றும் சந்த் கட்கேபாபா போன்ற பல பிரசித்தி பெற்ற யோகிகள் இங்கு வாழ்ந்து மறைந்திருப்பதே இதற்கு காரணம்.
மங்கள்வேதா நகருக்கு அருகிலேயே உள்ள லஷ்மி தஹிவாடி என்ற கிராமத்தில் செல்வத்தின் கடவுளான லட்சுமிக்குரிய கோயில் ஒன்றும் உள்ளது. இங்கு பால் உற்பத்தி அதிகம் உள்ளதால் அருகில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் தயிர் விநியோகிக்கும் கிராமமாக இது விளங்குகிறது. அதனாலேயே லஷ்மி தஹிவாடி (தஹி=தயிர்) என்ற பெயர் இந்த கிராமத்துக்கு வந்துள்ளது.