சோலாப்பூர் குடிமக்கள் மத்தியில் ஒரு பெருமையான அம்சமாக இந்த சோலாப்பூர் முனிசிபல் கௌன்சில் விளங்குகிறது.
இந்தியாவில் மற்ற எந்த நகரத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சோலாப்பூருக்கு உள்ளது. அதாவது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே 1930 ஆண்டிலேயே சோலாப்பூர் நகரம் சுதந்திரத்தை அனுபவித்துள்ளது.
அச்சமயம் இந்தியாவின் முதல் முனிசிபல் கௌன்சில் ஆக சோலாப்பூர் முனிசிபல் கௌன்சில் உருவாக்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியை அப்போதே மூன்று நாட்களுக்கு இந்த கௌன்சில் ஏற்றி வைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. காந்திஜியால் இந்த முயற்சி தொடங்கப்பட்டு சாதிக்கப்பட்டது. காந்திஜியின் பல போராட்டங்களில் சோலாப்பூர் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சோலாப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கான சிலைகள் அமைந்துள்ளன. ஹுதாத்மா சௌக் எனும் பிரசித்தமான நினைவுச்சின்னம் ஒன்றும் தியாகிகளுக்காக இங்கு அமைக்கப்பட்டுள்ளது.