உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டம் பல புராதனமான குகை ஓவிய ஸ்தலங்களை கொண்டுள்ளது. இவை வரலாற்றுக்காலத்திற்கும் முந்தைய யுகத்தை சேர்ந்தவையாகும்.
விந்திய மற்றும் கைமூர் மலைத்தொடர்களில் இந்த குகை ஓவிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன. மெஸோலிதிக் மற்றும் ஹீலியோலிதிக் யுகங்களை சேர்ந்தவையாக இந்த ஓவியங்கள் கருதப்படுகின்றன.
பஞ்ச்முகி குகைகள் மற்றும் லக்கானியா குகைகள் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து முறையே 8 கி.மீ மற்றும் 22 கி.மீ தூரத்திலும், கவ்வா கோஹ் மற்றும் லக்மா குகைகள் முறையே சுர்க் மற்றும் மாவ் கலான் கிராமத்திலும் அமைந்துள்ளன.
இந்த ஸ்தலங்களில் கோத்வா பஹார் எனும் இடத்திலுள்ள கவ்வா கோஹ் பாறைக்குகை அமைப்பில் ஏராளமான பாறைச்சித்திரங்கள் காணப்படுகின்றன. அந்நாளைய மனித நாகரிகம் குறித்த பல தகவல்களை இந்த பாறைச்சித்திரங்கள் அளிக்கின்றன.