ஷிவ் த்வார் எனும் இந்த கோயில் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து மேற்காக 40 கி.மீ தூரத்திலும், கோராவால் எனும் இடத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் ஷிவ்த்வார் சாலையில் அமைந்திருக்கிறது.
இந்த பிரம்மாண்டமான கோயில் சிவன் மற்றும் பார்வதிக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கருவறையில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் பார்வதி கருங்கல் சிலைகள் காணப்படுகின்றன.
மூன்று அடி உயரம் உள்ள இந்த சிலைகள் ஷீஜன் முத்திரையில் காட்சியளிக்கின்றன. ஒரு அற்புதமான கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் அக்காலத்திய கலைஞர்களின் திறமைக்கான சான்றாக வீற்றிருக்கிறது. செல்வம் பொருந்திய கோயிலாகவும் இது கருதப்படுகிறது.
இந்தப்பகுதி மக்களால் பெரிதும் பூஜிக்கப்படும் இந்த கோயில் ஆன்மீக அடிப்படையில் காசிக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுகிறது. மற்ற முக்கிய தெய்வங்களின் ஏராளமான கருங்கள் சிலைகளையும் இந்த கோயிலில் காணலாம்.
சிவராத்திரி மற்றும் சிரவண மாதம் போன்ற திருவிழாக்காலங்களில் இங்கு பக்தர்கள் அதிக அளவில் திரள்கின்றனர். குறிப்பாக திங்கள் கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கன்வாரியா எனப்படும் சிவபக்தர்கள் கால்நடையாக புனித நீர் சுமந்து வந்து இக்கோயிலில் சமர்ப்பித்து விரதத்தை முடிக்கின்றனர்.