சோன்டா என்ற இந்த சிறு ஆன்மீக நகரத்தில் முக்கியமான அம்சம் இந்த திரிவிக்கிரம கோயிலாகும். ராம திரிவிக்கிரம தேவரு’க்காக அரசப்ப நாயக்கரால் கட்டப்பட்ட இந்த கோயிலின் விக்கிரகம் படரிகாஷ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ வாடிராஜாவின் சார்பில் ஸ்ரீ பூட்ட ராஜாவால் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்காக தென் திசைக்கு பயணம் மேற்கொண்ட அவர் தன் பயணத்தின் போது பல அசுரர்களுடன் போரிட்டு அவர்களை தன் தேர் சக்கரத்தினாலேயே வீழ்த்தியதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. பக்தர்களும் பயணிகளும் இந்த கோயிலில் இன்றும் மூன்று சக்கரங்களுடன் நிற்கும் தேரைப்பார்க்கலாம்.
கருவறையில் திரிவிக்கிரம அவதாரக்கடவுளின் அழகிய சிலை, ஒரு தேர் மற்றும் ஸ்ரீ லட்சுமி தேவி சிலை போன்ற மூன்று முக்கிய அம்சங்கள் இந்த கோயிலில் குறிப்பிடத்தக்கவை. கோயிலின் தென்பகுதியில் காணப்படும் கல்வெட்டில் இந்த கோயிலுக்கான நிலம் அரசப்ப நாயக்கரால் வழங்கப்பட்டிருக்கும் தகவலும் இதர குறிப்புகளும் வடிக்கப்பட்டுள்ளது.