விந்தியகிரி கோயில்பயணிகள் சிரவணபெலகொலாவுக்கு வருகை தரும்போது விந்தியகிரி மலையில் அமைந்துள்ள விந்தியகிரி கோயிலையும் மறக்காமல் தரிசிப்பது அவசியம். விந்தியகிரி கோயில் அல்லது ஒடேகலா பசாதி என்று அழைக்கப்படும் இந்த கோயில் மூன்று மலையின் மீது சன்னதிகளுடன் 572 படிகளைத்தாண்டி அமைந்துள்ளது. படிகளை ஒட்டியே வேறு பல சிறு சன்னதிகளையும் பயணிகள் மேலே ஏறும்போது காணலாம்.
இந்த கோயில் ஸ்தலம் ஒரு உயரமான பாறைத்தள அமைப்பின்மீது எழுப்பப்பட்டுள்ளது. விந்தியகிரி கோயில் இந்தியாவின் பாறைச்சிற்பக்கலை மேன்மைக்கான ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சியில் உள்ள மூன்று சன்னதிகளில் நேமிநாதர், சாந்திநாதர் மற்றும் ஆதிநாதர் ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களின் அற்புதச்சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. மேலும் பத்மாவதி தேவியின் அவதாரமாக கருதப்படும் குல்லகயாஜி எனப்படும் சிற்பமும் இங்குள்ளது.
விந்தியகிரி கோயிலின் வாசல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு அக்கண்டு-பகிலு என்று அழைக்கப்படுகிறது. பாஹுபலி மற்றும் பரதா ஆகியோரில் சிற்பங்களும் வாயிலில் காணப்படுகின்றன.