சாஹேத் எனும் இந்த புத்த வழிபாட்டு வளாகம் ஷ்ரவஸ்தி நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இதில் பல புத்த கோயில்கள் தொகுப்புகளாக காணப்படுகின்றன.
இந்த இடம் பல்வேறு ஹிந்து புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கல்வி, ஆன்மீகம், கலைப்பயிற்சி போன்ற அம்சங்களுக்கான ஒரு கேந்திரமாக இந்த ஸ்தலம் புராதன காலத்தில் பெயர் பெற்று விளங்கியிருக்கிறது. இருப்பினும் பின்னால் வந்த வரலாற்றுக்காலத்தில் இது சோபையிழந்துவிட்டது.
வரலாற்றாசிரியர்களும் தொல்லியல் நிபுணர்களும் இந்த இடத்தில்தான் ஆதி ஜேதவனா மடாலயம் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். எனவே இது பௌத்த ஆர்வலர்கள் மத்தியில் முக்கிய யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தமடைந்துள்ளது. இடிபாடுகளுடன் காணப்பட்டாலும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர்.
பல்வேறு புத்த கோயில்களின் தொகுப்புகள் மற்றும் ஸ்தூபிகள் இந்த ஸ்தலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்தூபிகள் குஷாணர்கள் காலத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன.
பொதுவாக இங்கு மிச்சமிருக்கும் இடிபாடுகள் 3ம் நூற்றாண்டு துவங்கி 12ம் நூற்றாண்டு வரையிலான மௌரியர் காலத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன.