தால் ஏரியின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஹஸ்ரத்பல் மசூதி முஸ்லீம்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். இந்த மசூதி மதினாத்-உஸ்-ஸானி, அசார்-இ-ஷரிப் மற்றும் தர்ஹா ஷரிப் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
வெள்ளை மார்பிள் கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த மசூதி, தால் ஏரியின் திகைக்க வைக்கும் அழகு மற்றும் இமயமலைத் தொடரின் பின்புலம் ஆகியவற்றை இயற்கையாகவே பெற்று நிமிர்ந்து நிற்கிறது.
17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாறைக் கொண்டிருக்கும் இந்த மசூதி முகலாய மற்றும் காஷ்மீர கட்டிடக்கலைகளை புகுத்தி கட்டப்பட்டுள்ளதற்கு மிகவும் உதாரணமான கட்டிடமாகும்.
இம்மசூதியின் பெயரில் வரும் 'ஹஸ்' என்ற வார்த்தைக்கு 'புனிதமான' அல்லது 'பெரிய' என்றும் 'பல்' என்ற காஷ்மீர வார்த்தைக்கு 'இடம்' அல்லது 'மூடப்பட்ட' இடம் என்றும் பொருளாகும்.
இறைதூதர் முகமதுவின் முடி அல்லது 'மோய்-இ-முகாட்டாஸ்' -ஐ பாதுகாப்பாக வைத்திருப்பதாக கருதப்படும் இந்த மசூதி மிகவும் புனிதமான இடமாகும். இந்த முடியானது, ஏதாவதொரு விஷேச தினத்தில் மட்டுமே பொதுமக்களின் பார்வைக்கு காட்டப்படும்.