ஜியேஸ்தேஸ்வரா கோவில் பல்வேறு புனைகதைகள் மற்றும் நம்பிக்கைளுடன் தொடர்புடைய இடமாகும். இந்து மதத்தின் முக்கியமான இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களால் இந்த கோவில் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக சொல்லப்படுகிறது.
மற்றும் சிலர் 6-ம் நூற்றாண்டில் பேரரசர் கோபாதித்யர் என்பவர் இதைக் கட்டியதாக சொல்கின்றனர். மேலும், சில ஆராய்ச்சியாளர்கள் பேரரசர் அசோகரின் மகனான ஜலூகா என்பவர் இந்த கோவிலை கட்டியதாகவும் சொல்கின்றனர்.
பல்வேறு காலகட்டங்களில் புனரமைப்பு செய்யப்பட்ட இந்த கோவில், கடைசியாக லலிதாதித்ய முக்தபீடர் என்பவரால் 8-வது நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.