மும்தாஜ் மகாலின் தந்தை மற்றும் நூர் ஜகானின் சகோதரரான அப்துல் ஹாசன் கான் என்பவரால் 1633-ம் ஆண்டு தால் ஏரியின் கிழக்கு கரையில் கட்டப்பட்ட இடம் தான் நிஷாத் பூங்காவாகும்.
'நிஷாத் பூங்கா' என்ற வார்த்தைக்கு 'மகிழ்ச்சியின் தோட்டம்' என்று அர்த்தமாகும். இந்த பூங்காவில் அரிய வகையிலான பூக்கள், சினார் மரங்கள் மற்றும் சைப்ரஸ் மரங்கள் ஆகியவை உள்ளன.
இந்த சமதளமான தோட்டம், இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள முகல் தோட்டங்களிலேயே மிகவும் பெரியதாகும். இந்த பூங்கா அதன் அழகிய நீரூற்றுகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பூக்களின் அணிவகுப்பிற்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்த பூங்காவின் பின்னணியில் ஸபர்வான் மலைகள் உள்ளன.
முகலாய பேரரசரான ஷா ஜகான், தன்னுடைய மாமனாரான அப்துல் ஹாசன் ஆசாப் கானுக்கு சொந்தமான இந்த தோட்டத்தைப் பார்த்து மிகவும் கவர்திழுக்கப்பட்டார், அதனால் இரகசியமாக அதனை தனக்கு பரிசாக தந்து விடும்படி அவரை கேட்டுக் கொண்டார். இது நடக்காத போது, இந்த தோட்டத்திற்கான தண்ணீர்வரத்தினை தடை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.