1623-ம் ஆண்டில் நூர் ஜகானால் கட்டப்பட்ட பதார் மசூதி தான் காஷ்மீரில் இருக்கும் மசூதிகளிலேயே மிகவும் நல்ல முறையில் உள்ள பெரிய முகலாய கட்டிடமாகும். ஜீலம் நதிக்கரையில் உள்ள இந்த மசூதி ஷா ஹம்தான் மசூதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.
புகழ் பெற்ற முகலாய வரலாற்று ஆய்வாளர் மற்றும் கட்டிடக்கலை கலைஞரான மாலிக் ஹைதர் சௌதரியின் மேற்பார்வையில் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
9 நெடிய வளைவுகளைக் கிடைமட்டமாகக் கொண்டும், அதில் ஒரு பெரிய வளைவில் நுழைவாயிலையும் கொண்டும் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. சமீப காலத்தில், இந்த வளைவுகள் அனைத்தும் இரப்பர் கட்டுமானத்தைக் கொண்டு வலுப்படுத்தப்பட்டன.
தற்பொழுது மிகவும் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த மசூதி தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை கவர்ந்திழுக்கும் முகலாய கட்டிடங்களில் ஒன்றாகவே உள்ளது.