இது சிருங்கேரிக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப்பயணியும் அவசியம் காண வேண்டிய ஒன்று. சிருங்கேரியின் அடையாளம் என்று கூட சொல்லலாம். அத்வைத நெறிகளை பரப்பிய குரு ஆதிசங்கராச்சாரியாருக்காக இந்த ஆலயம் அர்ப்பணிக்கபட்டிருக்கிறது. இரண்டடி உயரபீட த்தில் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும் ஆதி சங்கராச்சாரியாரின் சிலை இந்த ஆலயத்தின் விசேஷம். லிங்கத்துக்கு நேர் எதிராக யோக நிஷ்டையில் இந்த சிலை காணப்படுகிறது. மேலும் ஆலயத்தின் உள்ளே சங்கராச்சாரியின் பிரதான சீடர்கள் நால்வரின் சிலைகளும் காணப்படுகின்றன.
பஞ்சாமிர்த அபிஷேகம், ருத்ர அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் போன்ற ஆலய சடங்குகள் வழக்கமாக இங்கு நடைபெறுகின்றன. பக்தர்கள் காலை 7 மணி தொடங்கி பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணி தொடங்கி இரவு 8.30 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.