சிருங்கேரியில் சுற்றுலாப்பயணிகள் நேரமிருப்பின் தவறவிடக்கூடாத இடங்களில் மலயாள பிரம்மா கோயிலும் ஒன்று. இங்குள்ள மூல விக்கிரகர் க்ஷேத்திர பாலகர் ஆவார்.
மலையாள பிரம்மா என்று உள்ளூர் பக்தர்களால் சிறப்பிக்கப்படுகின்றார். வழங்கி வரும் புராணக்கதையின்படி மலையாள பிரம்மா என்ற பெயர் பெற்ற ஞானி தன் அறிவை பிறருக்கு கற்பித்தளிக்காத காரணத்தால் பிரம்ம ராட்சஸாக மாறிவி விடுகிறார்.
பின் வித்யாரண்ய முனிவர் அவரை க்ஷேத்திர பாலகராய் மாற்றி விமோசனம் அளித்ததாய் புராணிகம் கூறுகிறது. கோயிலின் வாசலின் இடப்புறத்தில் ஷாரதாம்பா சிலை கையில் சூலாயுதத்துடன் தரிசிக்கக்கிடைக்கிறது.