சாரதாம்பா கோயில் என்று அழைக்கப்படுகிறது. அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம்பாவுக்காய் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஷீ சங்கர பஹவத்பாதரால் 7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.
தீயில் சிக்கி இடிபாடடைந்த நிலையில் இருந்த இந்த கோயில் தென்னிந்திய கட்டிடக்கலை மரபுப்படி திரும்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே உள்ள மகாமண்டபத்தில் செதுக்கப்பட்டு துவாரபாலகர்கள், துர்காதேவி மற்றும் ராஜ ராஜேச்வரி ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன.
மேலும் அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக்கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மேலும் உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்றவற்றை இந்த புனிதத்தலத்தில் கொண்டாடுகின்றனர்.