ஸ்ரீரங்கபட்டணா செல்லும் பயணிகள் மஹாதேவபுரா ஸ்தலத்தையும் மறக்காமல் பார்ப்பது அவசியம். அடர்ந்த காடுகளின் காவிரி ஓடும் பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமம் ஒரு பிரசித்தமான சிற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.
‘கெண்டே ஹொசல்லி பறவைகள் சரணாலயம்’ இந்த கிராமத்தில் பயணிகளுக்கான முக்கிய சுற்றுலா அம்சமாக உள்ளது. 600 ஆண்டுகள் பழமையை உடைய ஒரு சிவன் கோயிலும் இந்த கிராமத்தில் உள்ளது.
வார இறுதியில் மைசூர், பெங்களூர், மாண்டியா போன்ற அருகாமை நகரங்களிலிருந்து இந்த கிராமத்திற்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் சிற்றுலாப்பயணம் வருகின்றனர்.