ஸ்ரீசைலம் நகரத்தின் மையத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் கிருஷ்ணா நதிக்கு குறுக்கே ஸ்ரீசைலம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர் மின் திட்டம் செயல்பட்டு வரும் ஸ்ரீசைலம் அணை, நல்லமலை குன்றுகளின் மலையிடுக்குகளில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் சிறப்பானது.
ஸ்ரீசைலம் அணை திட்டம் 1960-இல் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றப்பட்டது. இந்த அணையின் நீர் மின் திட்டத்தின் மூலமாக 770 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதோடு இன்று 2200 சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கிய பகுதிகளின் நீர் தேவையை ஸ்ரீசைலம் அணை பூர்த்தி செய்து வருகிறது.
ஸ்ரீசைலம் நீர்தேக்கத்தின் உள்வரும் நீர் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் அதிகளவில் நீரினை இங்கு சேமித்து வைத்து கொள்ள முடிகிறது. எனினும் வெள்ளம் வரும் சமயங்களில் வேகமாக நிரம்பும் ஸ்ரீசைலம் அணையின் உபரி நீர் நாகர்ஜுனா அணையை அடைந்து விடும். இந்த வெள்ள நீரும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை.