கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் புகழ்பெற்ற நூலகம் பென்னிங்டன் நூலகம் ஆகும். இது இந்நகரில் உள்ள நூலகங்களிலேயே மிகவும் பழமை வாய்ந்தது, ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களுக்கு கல்விபுகட்டுவதில் முக்கிய பங்கு வகித்ததுமாக இருக்கின்றது.
அதிகமான புத்தகங்களும், அரசிதழ்களும் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வருகின்றன. 1952 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அரசிதழ்களை தேடி இங்கு வருகிறவர்களும் அநேகர்.
மாநிலத்தில் வெகு சில நூலகங்களே இத்தகைய சாதனையை அடைந்து இருக்கின்றன. முழுமையான கல்வியை கொடுப்பதற்காக அதிகமான வசதிகளை ஏற்படுத்துவதற்காக, வாசகர்களிடம் நூலக அதிகாரிகள் மிகவும் பொறுமையாக நடந்துகொள்கின்றார்கள்.
1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நூலகம் தனியார் நூலகம் என்பது ஒரு வரலாற்று உண்மை. பல ஆண்டுகளாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களுக்கு இந்த நூலகம் பயனுள்ளதாக இருந்து வருகின்றது.