ஒட்டுமொத்த தமிழகத்திலும் உள்ள சிறந்த சுற்றுலாத்தலங்களில் சதுரகிரி மலையும் ஒன்று. கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இந்த பஞ்சாயத்து இடம் அமைந்து இருக்கின்றது.
நான்கு வேதங்களும் இணைந்து இந்த மலை உருவானது என்று உள்ளூர்வாசிகள் நம்புவதால் இதை சதுரகிரி என்று அழைக்கிறார்கள். இவ்விடத்தை மகாலிங்கம் மலை என்று அழைப்பவர்களும் உண்டு.
மகா விஷ்ணுவின் வீடுகளில் சதுரகிரியும் ஒன்று. இங்குள்ள தெய்வம் குனிந்த நிலையில் இருக்கின்றது. இந்த மலையின் மீது ஏறுவதற்கு நான்கு முதல் ஐந்து மணிநேரங்கள் ஆகும்.
தினந்தோறும் இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. சதுரகிரியில் தனிப்பாறை என்று ஒரு இடம் இருக்கின்றது. தனிப்பாறையில் மகா காளி கோவில் ஒன்று இருக்கிறது, இங்கே சக்திவாய்ந்த யாகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. குன்றின் உச்சியில் அலைப்பேசி இணைப்புகள் கிடையாது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.