ஸ்ரீவில்லிப்புத்தூரில் பல கிராமங்கள் இருப்பினும் வலையாபதி கிராமமே மிகவும் புகழ் வாய்ந்தது.இக்கிராமத்தில் யாரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முடியாது.
ஒருவர் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய மதிப்பீடுகளை எடுத்துக்காட்டியதற்காக மாநில மற்றும் மத்திய அரசுகள் இக்கிராமத்திற்கு விருதுகள் வழங்கி இருக்கிறார்கள். இவ்விடம் மிகவும் வளமையானதாக இருக்கிறது, இவ்விடத்தின் முக்கிய தொழில் விவசாயமே.
இங்குள்ள விவசாயிகள் வளமான வாழ்க்கை வாழ்வதோடு பிறருடைய நலனுக்காகவும் உழைக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் அனைவரும் இக்கிராமத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள்.
தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றில் இந்த கிராமத்திற்கு அதிக பங்கு உண்டு. ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்த கிராமம் சுற்றுலா பயணிகள் இடையே பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இது ஒரு மாதிரி கிராமம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் அனைவரும் இக்கிராமத்தை பார்வையிட வருகிறார்கள்.